குன்றுகள் போல்-திரை உந்தி, அம் தண் மணி ஆர்தர,
மேதி
கன்று உடன் புல்கி, ஆயம் மனை சூழ் கவின் ஆர்
கலிக்காமூர்,
என்று உணர் ஊழியும் வாழும் எந்தை பெருமான் அடி ஏத்தி
நின்று உணர்வாரை நினையகில்லார், நீசர் நமன் தமரே.