திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: குறிஞ்சி

“துன்பம், நும்மைத் தொழாத நாள்கள்” என்பாரும்,
“இன்பம், நும்மை ஏத்தும் நாள்கள்” என்பாரும்,
“நுன்பின் எம்மை நுழையப் பணியே!” என்பாரும்;
அன்பன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்!

பொருள்

குரலிசை
காணொளி