திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

எழுது கொடி இடையார், ஏழை மென்தோள்
இளையார்கள், நம்மை இகழா முன்னம்
பழுதுபட நினையேல், பாவி நெஞ்சே! பண்டுதான்
என்னோடு பகைதான் உண்டோ?
முழுது உலகில் வானவர்கள் முற்றம் கூடி,
முடியால் உற வணங்கி, முற்றம் பற்றி,
அழுது, திருவடிக்கே பூசை செய்ய
இருக்கின்றான் ஊர்போலும், ஆரூர்தானே.

பொருள்

குரலிசை
காணொளி