கோவணமோ, தோலோ, உடை ஆவது? கொல்
ஏறோ, வேழமோ, ஊர்வதுதான்?
பூவணமோ, புறம்பயமோ, அன்று ஆயில்-தான்
பொருந்தாதார் வாழ்க்கை திருந்தாமையோ?
தீ வணத்த செஞ்சடைமேல்-திங்கள் சூடி, திசை
நான்கும் வைத்து உகந்த செந்தீவண்ணர்,
ஆவணமோ, ஒற்றியோ, அம்மானார் தாம்-
அறியேன் மற்று-ஊர் ஆம் ஆறு ஆரூர்தானே?.