திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

தேரூரார்; மாவூரார்; திங்களூரார்; திகழ்
புன்சடைமுடிமேல்-திங்கள்சூடி;
கார் ஊராநின்ற கழனிச் சாயல் கண் ஆர்ந்த
நெடுமாடம் கலந்து தோன்றும்
ஓர் ஊரா உலகுஎலாம் ஒப்பக் கூடி, “உமையாள்
மணவாளா!” என்று வாழ்த்தி,
“ஆரூரா! ஆரூரா!” என்கின்றார்கள்;
அமரர்கள்தம் பெருமானே! எங்கு உற்றாயே?.

பொருள்

குரலிசை
காணொளி