திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

நீர் ஊரும் செஞ்சடையாய்! நெற்றிக்கண்ணாய்!
நிலாத்திங்கள்-துண்டத்தாய்! நின்னைத் தேடி,
ஓர் ஊரும் ஒழியாமே ஒற்றித்து எங்கும் உலகம்
எலாம் திரிதந்து, நின்னைக் காண்பான்,
தேர் ஊரும் நெடுவீதி பற்றி நின்று, திருமாலும்
நான்முகனும், தேர்ந்தும் காணாது,
“ஆரூரா! ஆரூரா!” என்கின்றார்கள்-அமரர்கள்
தம் பெருமானே! ஆரூராயே!.

பொருள்

குரலிசை
காணொளி