நீற்றினையும், நெற்றி மேல் இட்டார்போலும்;
நீங்காமே வெள் எலும்பு பூண்டார்போலும்;
காற்றினையும் கடிது ஆக நடந்தார்போலும்;
கண்ணின்மேல் கண் ஒன்று உடையார்போலும்;
கூற்றினையும் குரை கழலால் உதைத்தார்போலும்;
கொல் புலித் தோல் ஆடைக் குழகர்போலும்;
ஆற்றினையும் செஞ்சடைமேல்
வைத்தார்போலும்-அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.