திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்:

முடி ஆர் மதி, அரவம், வைத்தார்போலும்;
மூ உலகும் தாமே ஆய் நின்றார்போலும்;
செடி ஆர் தலைப் பலி கொண்டுஉழல்வார்போலும்;
செல் கதிதான் கண்ட சிவனார்போலும்;
கடி ஆர் நஞ்சு உண்டு இருண்ட கண்டர்போலும்;
கங்காளவேடக் கருத்தர்போலும்;
அடியார் அடிமை உகப்பார்போலும்-அணி
ஆரூர்த் திரு மூலட்டானனாரே.

பொருள்

குரலிசை
காணொளி