பிண்டத்தைக் காக்கும் பிரானார்போலும்;
பிறவி, இறவி, இலாதார்போலும்;
முண்டத்து முக்கண் உடையார்போலும்;
முழுநீறு பூசும் முதல்வர்போலும்;
கண்டத்து இறையே கறுத்தார்போலும்;
காளத்தி, காரோணம், மேயார்போலும்;
அண்டத்துக்கு அப்புறம் ஆய் நின்றார்போலும்-
அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.