துணி உடையர், தோல் உடையர், என்பார்போலும்;
தூய திருமேனிச் செல்வர்போலும்;
பிணி உடைய அடியாரைத் தீர்ப்பார்போலும்;
பேசுவார்க்கு எல்லாம் பெரியார்போலும்;
மணி உடைய மா நாகம் ஆர்ப்பார்போலும்;
வாசுகி மா நாணாக வைத்தார் போலும்;
அணி உடைய நெடுவீதி நடப்பார்போலும்-
அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.