அலை அடுத்த பெருங்கடல் நஞ்சு அமுதா உண்டு,
அமரர்கள் தம் தலை காத்த ஐயர்; செம்பொன்
சிலை எடுத்து மா நாகம் நெருப்புக் கோத்துத்
திரிபுரங்கள் தீ இட்ட செல்வர் போலும்;
“நிலை அடுத்த பசும் பொன்னால், முத்தால், நீண்ட
நிரை வயிரப் பலகையால், குவையாத் துற்ற
மலை அடுத்த மழபாடி வயிரத்தூணே!” என்று
என்றே நான் அரற்றி நைகின்றேனே.