தூயானை, சுடர்ப் பவளச்சோதியானை, தோன்றிய எவ்
உயிர்க்கும் துணை ஆய் நின்ற
தாயானை, சக்கரம் மாற்கு ஈந்தான் தன்னை, சங்கரனை,
சந்தோக சாமம் ஓதும்
வாயானை, மந்திரிப்பார் மனத்து உளானை,
வஞ்சனையால் அஞ்சு எழுத்தும் வழுத்துவார்க்குச்
சேயானை, திரு வீழிமிழலையானை, சேராதார்
தீநெறிக்கே சேர்கின்றாரே.