பரத்தானை; இப் பக்கம் பல ஆனானை; பசுபதியை; பத்தர்க்கு
முத்தி காட்டும்
வரத்தானை; வணங்குவார் மனத்து உளானை; மாருதம், மால்,
எரி, மூன்றும் வாய் அம்பு ஈர்க்கு ஆம்
சரத்தானை; சரத்தையும் தன் தாள்கீழ் வைத்த தபோதனனை;
சடாமகுடத்து அணிந்த பைங்கண்
சிரத்தானை; திரு வீழிமிழலையானை; சேராதார் தீநெறிக்கே
சேர்கின்றாரே.