செந்தாமரைப் போது அணிந்தான் கண்டாய்; சிவன்
கண்டாய்; தேவர் பெருமான் கண்டாய்;
பந்து ஆடு மெல் விரலாள் பாகன் கண்டாய்;
பாலோடு, நெய், தயிர், தேன், ஆடி கண்டாய்;
மந்தாரம் உந்தி வரும் நீர்ப்பொன்னி
வலஞ்சுழியில் மன்னும் மணாளன் கண்டாய்
கொந்து ஆர் பொழில் புடை சூழ் கொட்டையூரில்
கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.