திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

சண்டனை நல் அண்டர் தொழச் செய்தான் கண்டாய்;
சதாசிவன் கண்டாய்; சங்கரன் தான் கண்டாய்;
தொண்டர் பலர் தொழுது ஏத்தும் கழலான் கண்டாய்; சுடர்
ஒளி ஆய்த் தொடர்வு அரிது ஆய் நின்றான் கண்டாய்;
மண்டு புனல் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்; மா
முனிவர் தம்முடைய மருந்து கண்டாய்
கொண்டல் தவழ் கொடி மாடக் கொட்டையூரில்
கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.

பொருள்

குரலிசை
காணொளி