திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

வரும் மிக்க மதயானை உரித்தான் தன்னை; வானவர் கோன்
தோள் அனைத்தும் மடிவித்தானை;
தரு மிக்க குழல் உமையாள் பாகன் தன்னை; சங்கரன்
எம்பெருமானை; தரணி தன்மேல்
உரு மிக்க மணி மாடம் நிலாவு வீதி, உத்தமர் வாழ்தரும்,
ஓமாம்புலியூர் மன்னும்
திரு மிக்க வடதளி எம் செல்வன் தன்னை; சேராதே திகைத்து
நாள் செலுத்தினேனே!.

பொருள்

குரலிசை
காணொளி