திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

பாங்கு உடைய எழில் அங்கி அருச்சனை முன் விரும்பப்
பரிந்து அவனுக்கு அருள் செய்த பரமன் தன்னை;
பாங்கு இலா நரகு அதனில்-தொண்டர் ஆனார் பாராத
வகை பண்ண வல்லான் தன்னை;
ஓங்கு மதில் புடை தழுவும் எழில் ஓமாம்புலியூர், உயர்
புகழ் அந்தணர் ஏத்த, உலகர்க்கு என்றும்
தீங்கு இல், திரு வடதளி எம் செல்வன் தன்னை;
சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே!.

பொருள்

குரலிசை
காணொளி