சூழும் துயரம் அறுப்பார் போலும்; தோற்றம் இறுதி ஆய்
நின்றார் போலும்;
ஆழும் கடல் நஞ்சை உண்டார் போலும்; ஆடல் உகந்த
அழகர் போலும்;
தாழ்வு இல் மனத்தேனை ஆளாக்கொண்டு, தன்மை
அளித்த தலைவர் போலும்;
ஏழு பிறப்பும் அறுப்பார் போலும் இன்னம்பர்த் தான்
தோன்றி ஈசனாரே.