வினை என்போல் உடையார் பிறர் ஆர்? உடையான், அடி நாயேனைத்
தினையின் பாகமும் பிரிவது திருக்குறிப்பு அன்று; மற்று அதனாலே,
முனைவன் பாத நல் மலர் பிரிந்திருந்தும், நான் முட்டிலேன், தலை கீறேன்;
இனையன் பாவனை, இரும்பு; கல், மனம்; செவி, இன்னது என்று அறியேனே.
சிவ.அ.தியாகராசன்