வேனில் வேள் கணை கிழித்திட, மதி சுடும்; அது தனை நினையாதே,
மான் நிலாவிய நோக்கியர் படிறிடை மத்து இடு தயிர் ஆகி,
தேன் நிலாவிய திருஅருள் புரிந்த, என் சிவன் நகர் புகப் போகேன்;
ஊனில் ஆவியை ஓம்புதல் பொருட்டு, இனும் உண்டு உடுத்து இருந்தேனே.
சிவ.அ.தியாகராசன்