பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

ஒன்பதாம் தந்திரம் / ஆகாசப் பேறு
வ.எண் பாடல்
1

உள்ளத்து உளோம் என ஈசன் ஒருவனை
உள்ளத்து உளே அங்கி ஆய ஒருவனை
உள்ளத்து உளே நீதி ஆய ஒருவனை
உள்ளத்து உளே உடல் ஆகாயம் ஆமே.

2

பெரு நிலம் ஆய் அண்டம் ஆய அண்டத்து அப்பால்
குரு நிலம் ஆய் நின்ற கொள்கையான் ஈசன்
பெரு நிலம் ஆய் நின்று தாங்கிய தாளோன்
அரு நிலை ஆய் நின்ற ஆதிப் பிரானே.

3

அண்ட ஒளியும் அகண்ட ஒளியுடன்
பிண்ட ஒளியால் பிதற்றும் பெருமையை
உண்ட வெளிக்குள் ஒளிக்குள் ஒளித்தது
கொண்ட குறியைக் குலைத்தது தானே.

4

பயன் உறு கன்னியர் போகத்தின் உள்ளே
பயன் உறும் ஆதி பரம் சுடர்ச் சோதி
அயனொடு மால் அறியா வகை நின்றிட்டு
உயர் நெறியாய் ஒளி ஒன்று அது ஆமே.

5

அறிவுக்கு அறிவு ஆம் அகண்ட ஒளியும்
பிறியா வலத்தினில் பேர் ஒளி மூன்றும்
அறியாது அடங்கிடில் அத்தன் அடிக்குள்
பிறியாது இருக்கில் பெரும் காலம் ஆமே.

6

ஆகாச வண்ணன் அமரர் குலக் கொழுந்து
ஏகாச மாசுணம் இட்டு அங்கு இருந்தவன்
ஆகாச வண்ணம் அமர்ந்து நின்று அப்புறம்
ஆகாசம் ஆய் அங்கி வண்ணனும் ஆமே.

7

உயிர்க்கின்ற வாறும் உலகமும் ஒக்க
உயிர்க்கின்ற உள் ஒளி சேர்கின்ற போது
குயில் கொண்ட பேதை குலாவி உலாவி
வெயில் கொண்டு என் உள்ளம் வெளியது ஆமே.

8

நணுகில் அகல் இலன் ஆதன் உலகத்து
அணுகில் அகன்ற பெரும் பதி நந்தி
நணுகிய மின் ஒளி சோதி வெளியைப்
பணியின் அமுதம் பருகலும் ஆமே.

9

புறத்து உள ஆகாசம் புவனம் உலகம்
அகத்து உள ஆகாசம் எம் ஆதி அறிவு
சிவத்துள் ஆகாசம் செழும் சுடர்ச் சோதி
சகத்துள் ஆகாசம் தானம் சமாதியே.