பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
உள்ளத்து ஒருவனை உள் உறு சோதியை உள்ளம் விட்டு ஓர் அடி நீங்கா ஒருவனை உள்ளமும் தானும் உடனே இருக்கினும் உள்ளம் அவனை உரு அறியாதே.
இன்பப் பிறவி படைத்த இறைவனும் துன்பம் செய் பாசத் துயருள் அடைத்தனன் என்பில் கொளுவி இசைந்துறு தோற்றசை முன்பில் கொளுவி முடி குவ தாமே.
இறையவன் மாதவன் இன்பம் படைத்த மறையவன் மூவரும் வந்து உடன் கூடி இறையவன் செய்த இரும் பொறியாக்கை மறையவன் வைத்த பரிசு அறியாதே.
காண்கின்ற கண் ஒளி காதல் செய்து ஈசனை ஆண் பெண் அலி உருவாய் நின்ற ஆதியை ஊண் படு நா உடை நெஞ்சம் உணர்ந்திட்டுச் சேண் படு பொய்கைச் செயல் அணையாரே
தெருளும் உலகிற்கும் தேவர்க்கும் இன்பம் அருளும் வகை செய்யும் ஆதிப் பிரானும் சுருளும் சுடர் உறு தூவெண் சுடரும் இருளும் அற நின்ற இருட்டு அறையாமே.
அரைக்கின்ற அருள் தரும் அங்கங்கள் ஓசை உரைக்கின்ற ஆசையும் ஒன்றொடு ஒன்று ஒவ்வாப் பரக்கும் உருவமும் பாரகம் தானாய்க் கரக்கின்றவை செய்த காண் தகையானே.
ஒளித்து வைத்தேன் உள் உற உணர்ந்து ஈசனை வெளிப்பட்டு நின்று அருள் செய்திடும் ஈண்டே களிப்பொடும் காதன்மை என்னும் பெருமை வெளிப்பட்டு இறைஞ்சினும் வேட்சியும் ஆமே.
ஒருங்கிய பாசத்துள் உத்தம சித்தன் இருங்கரை மேல் இருந்து இன்புற நாடி வருங்கரை ஓரா வகையினில் கங்கை அருங் கரை பேணில் அழுக்கு அறலாமே.
மண் ஒன்று தான் பல நல் கலம் ஆயிடும் உள் நின்ற யோனி கட்கு எல்லாம் ஒருவனே கண் ஒன்று தான் பல காணும் தனைக் காணா அண்ணலும் இவ் வண்ணம் ஆகி நின்றானே.