விண் உறு மால்வரை போல் விடை ஏறுவர், ஆறு சூடுவர்,
விரி சுரி ஒளி கொள் தோடு நின்று இலங்கக்
கண் உற நின்று ஒளிரும் கதிர் வெண்மதிக்கண்ணியர்,
கழிந்தவர் இழிந்திடும் உடைதலை கலனாப்
பெண் உற நின்றவர், தம் உருவம் அயன் மால் தொழ
அரிவையைப் பிணைந்து இணைந்து அணைந்ததும் பிரியார்
தண் இதழ் முல்லையொடு, எண் இதழ் மௌவல், மருங்கு அலர்
கருங்கழி நெருங்கு நல்-தருமபுரம்பதியே.