திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்: யாழ்மூரி

புத்தர், கடத் துவர் மொய்த்து உறி புல்கிய கையர், பொய்
மொழிந்த அழிவு இல் பெற்றி உற்ற நல்-தவர், புலவோர்,
பத்தர்கள், அத் தவம் மெய்ப் பயன் ஆக உகந்தவர்;
நிகழ்ந்தவர்; சிவந்தவர்; சுடலைப் பொடி அணிவர்;
முத்து அன வெண்நகை ஒண் மலைமாது உமை பொன் அணி
புணர் முலை இணை துணை அணைவதும் பிரியார்
தத்து அருவித்திரள் உந்திய மால்கடல் ஓதம் வந்து
அடர்த்திடும் தடம் பொழில்-தருமபுரம்பதியே.

பொருள்

குரலிசை
காணொளி