திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்: யாழ்மூரி

கூழை அம் கோதை குலாயவள் தம் பிணை புல்க,
மல்கு மென்முலை,பொறி கொள் பொன்-கொடி இடை, துவர்வாய்,
மாழை ஒண்கண் மடவாளை ஓர்பாகம் மகிழ்ந்தவர்;
வலம் மலி படை, விடை கொடி, கொடு மழுவாள்
யாழையும் எள்கிட ஏழிசை வண்டு முரன்று, இனம்
துவன்றி, மென்சிறகு அறை உற நற விரியும் நல்-
தாழையும் ஞாழலும் நீடிய கானலின் நள் அல் இசை
புள் இனம் துயில் பயில் தருமபுரம்பதியே.

பொருள்

குரலிசை
காணொளி