திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்: யாழ்மூரி

நேரும் அவர்க்கு உணரப் புகில் இல்லை; நெடுஞ்சடைக்
கடும்புனல் படர்ந்து இடம் படுவது ஒர் நிலையர்;
பேரும் அவர்க்கு எனை ஆயிரம்! முன்னைப் பிறப்பு, இறப்பு,
இலாதவர்; உடற்று அடர்த்த பெற்றி யார் அறிவார்?
ஆரம் அவர்க்கு அழல் வாயது ஒர் நாகம்; அழகு உற
எழு கொழு மலர் கொள் பொன் இதழி நல் அலங்கல்;
தாரம் அவர்க்கு இமவான்மகள்; ஊர்வது போர் விடை
கடு படு செடி பொழில்-தருமபுரம் பதியே.

பொருள்

குரலிசை
காணொளி