திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

எடுத்து உடன்ற முனைஞாட்பின் இருபடையில் பொரு படைஞர்
படுத்த நெடும் கரித்துணியும் பாய் மாவின் அறு குறையும்
அடுத்து அமர் செய் வயவர் கரும் தலைய மலையும் அலை செந்நீர்
மடுத்த கடல் மீளவும் தாம் வடிவேல் வாங்கிடப் பெருக.

பொருள்

குரலிசை
காணொளி