வரி உறு புலி அதள் உடையினன், வளர்பிறை ஒளி கிளர்
கதிர் பொதி
விரி உறு சடை, விரை புழை பொழில் விழவு ஒலி மலி
கழுமலம் அமர்
எரி உறு நிற இறைவனது அடி இரவொடு பகல் பரவுவர் தமது
எரி உறு வினை, செறிகதிர் முனை இருள் கெட, நனி நினைவு
எய்துமதே.