கொழு மலர் உறை பதி உடையவன், நெடியவன், என இவர்களும்,
அவன்
விழுமையை அளவு அறிகிலர், இறை; விரை புணர் பொழில் அணி
விழவு அமர்
கழுமலம் அமர் கனல் உருவினன் அடி இணை தொழுமவர்
அருவினை
எழுமையும் இல, நில வகைதனில்; எளிது, இமையவர் வியன்
உலகமே.