திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்: நட்டபாடை

வரை பொருது இழி அருவிகள் பல பருகு ஒரு கடல் வரி
மணல் இடை,
கரை பொரு திரை ஒலி கெழுமிய கழுமலம் அமர் கனல்
உருவினன்;
அரை பொரு புலி அதள் உடையினன்; அடி இணை தொழ,
அருவினை எனும்
உரை பொடி பட உறு துயர் கெட, உயர் உலகு எய்தல்
ஒருதலைமையே.

பொருள்

குரலிசை
காணொளி