வரை பொருது இழி அருவிகள் பல பருகு ஒரு கடல் வரி
மணல் இடை,
கரை பொரு திரை ஒலி கெழுமிய கழுமலம் அமர் கனல்
உருவினன்;
அரை பொரு புலி அதள் உடையினன்; அடி இணை தொழ,
அருவினை எனும்
உரை பொடி பட உறு துயர் கெட, உயர் உலகு எய்தல்
ஒருதலைமையே.