வினை கெட மன நினைவு அது முடிக எனின், நனி தொழுது
எழு குலமதி
புனை கொடி இடை பொருள் தரு படு களிறினது உரி புதை
உடலினன்,
மனை குடவயிறு உடையனசில வரு குறள் படை உடையவன், மலி
கனை கடல் அடை கழுமலம் அமர் கதிர் மதியினன், அதிர்
கழல்களே!