திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்

பதிகம்: 
பண்: செவ்வழி

விண்ணர், வேதம் விரித்து ஓத வல்லார், ஒருபாகமும்
பெண்ணர், எண்ணார் எயில் செற்று உகந்த பெருமான்,
இடம்
தெண் நிலாவின்(ன்) ஒளி தீண்டு சோலைத் திலதைப்பதி,
மண் உளார் வந்து அருள் பேணி நின்ற(ம்) மதிமுத்தமே.

பொருள்

குரலிசை
காணொளி