தொலைவு இலாத அரக்கன்(ன்) உரத்தைத் தொலைவித்து,
அவன்
தலையும் தோளும் நெரித்து சதுரர்க்கு இடம் ஆவது
கலையின் மேவும் மனத்தோர், இரப்போர்க்குக் கரப்பு
இலார்,
பொலியும் அம் தண்பொழில் சூழ்ந்து அழகு ஆரும்
புகலியே.