பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
வரை குடையா மழை தாங்கினானும், வளர் போதின்கண் புரை கடிந்து ஓங்கிய நான்முகத்தான், புரிந்து ஏத்தவே, கரை கடல் சூழ் வையம் காக்கின்றானும் கடவூர்தனுள் விரை கமழ் பூம்பொழில் வீரட்டானத்து அரன் அல்லனே?