பொரும் திறல் பெருங்கைமா உரித்து, உமை அஞ்சவே,
ஒருங்கி நோக்கி,
பெருந் திறத்து அநங்கனை அநங்கமா விழித்ததும்
பெருமைபோலும்
வருந் திறல் காவிரி வடகரை அடை குரங்காடுதுறை,
அருந்திறத்து இருவரை அல்லல் கண்டு ஓங்கிய
அடிகளாரே!