சங்க வார் குழையினர், தழல் அன உருவினர், தமது அருகே
எங்கும் ஆய் இருந்தவர், அருந்தவ முனிவருக்கு அளித்து
உகந்தார்
பொங்கு மா புனல் பரந்து அரிசிலின் வடகரை திருத்தம்
பேணி
அங்கம் ஆறு ஓதுவார், இருப்பு இடம் அம்பர்மாகாளம்
தானே.