திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

வரி அரா அதனிசைத் துயின்றவன் தானும், மா மலர்
உளானும்,
எரியரா, அணி கழல் ஏத்த ஒண்ணா வகை உயர்ந்து,
பின்னும்
பிரியர் ஆம் அடியவர்க்கு அணியராய், பணிவு இலாதவருக்கு
என்றும்
அரியராய், அரிவையோடு இருப்பு இடம் அம்பர்மாகாளம்
தானே.

பொருள்

குரலிசை
காணொளி