திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஞானமே முதலாம் ‘நான்கும் நவை அறத் தெரிந்து மிக்கார்;
தானமும் தவமும் வல்லார்; தகுதியின் பகுதி சார்ந்தார்;
ஊனம் மேல் ஒன்றும் இல்லார் உலகெலாம் புகழ்ந்து போற்றும்
மானமும் பொறையும் தாங்கி மனை அறம் புரிந்து வாழ்வார்.

பொருள்

குரலிசை
காணொளி