பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கொம்பு நல் வேனிலவனைக் குழைய முறுவல் செய்தானும், செம்பு நல் கொண்ட எயில் மூன்றும் தீ எழக் கண் சிவந்தானும், வம்பு நல் கொன்றையினானும், வாள் கண்ணி வாட்டம் அது எய்த அம்பர ஈர் உரியானும்- ஆரூர் அமர்ந்த அம்மானே.