பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருவாரூர்
வ.எண் பாடல்
1

பாடு இளம் பூதத்தினானும், பவளச்செவ்வாய் வண்ணத்தானும்,
கூடு இளமென் முலையாளைக் கூடிய கோலத்தினானும்,
ஓடு இள வெண் பிறையானும், ஒளி திகழ் சூலத்தினானும்,
ஆடு இளம் பாம்பு அசைத்தானும்-ஆரூர் அம்ர்ந்த அம்மானே.

2

நரியைக் குதிரை செய்வானும், நரகரைத் தேவு செய்வானும்,
விரதம் கொண்டு ஆட வல்லானும், விச்சு இன்றி நாறு செய்வானும்,
முரசு அதிர்ந்து ஆனை முன் ஓட, முன் பணிந்து அன்பர்கள் ஏத்த,
அரவு அரைச் சாத்தி நின்றானும்-ஆரூர் அமர்ந்த அம்மானே.

3

நீறு மெய் பூச வல்லானும், நினைப்பவர் நெஞ்சத்து உளானும்,
ஏறு உகந்து ஏற வல்லானும், எரி புரை மேனியினானும்,
நாறு கரந்தையினானும், நால்மறைக் கண்டத்தினானும்,
ஆறு சடைக் கரந்தானும்-ஆரூர் அமர்ந்த அம்மானே.

4

கொம்பு நல் வேனிலவனைக் குழைய முறுவல் செய்தானும்,
செம்பு நல் கொண்ட எயில் மூன்றும் தீ எழக் கண் சிவந்தானும்,
வம்பு நல் கொன்றையினானும், வாள் கண்ணி வாட்டம் அது எய்த
அம்பர ஈர் உரியானும்- ஆரூர் அமர்ந்த அம்மானே.

5

ஊழி அளக்க வல்லானும், உகப்பவர் உச்சி உள்ளானும்,
தாழ் இளஞ் செஞ்சடையானும், தண்ணம் ஆர் திண் கொடியானும்,
தோழியர் தூது இடையாட, தொழுது அடியார்கள் வணங்க,
ஆழி வளைக் கையினானும்-ஆரூர் அமர்ந்த அம்மானே.

6

ஊர் திரை வேலை உள்ளானும், உலகு இறந்த ஒண் பொருளானும்,
சீர் தரு பாடல் உள்ளானும், செங்கண் விடைக் கொடியானும்,
வார் தரு பூங்குழலாளை மருவி உடன் வைத்தவனும்,
ஆர்திரை நாள் உகந்தானும்- ஆரூர் அமர்ந்த அம்மானே.

7

தொழற்கு அம் கை துன்னி நின்றார்க்குத் தோன்றி அருள வல்லானும்;
கழற்கு அங்கை பல் மலர் கொண்டு காதல் கன்ற்ற நின்றானும்;
குழல் கங்கையாளை உள் வைத்துக் கோலச் சடை கரந்தானும்;
அழல், கம், கை ஏந்த வல்லானும்-ஆரூர் அமர்ந்த அம்மானே.

8

ஆயிரம் தாமரை போலும் ஆயிரம் சேவடியானும்,
ஆயிரம் பொன் வரை போலும் ஆயிரம் தோள் உடையானும்,
ஆயிரம் ஞாயிறு போலும் ஆயிரம் நீள் முடியானும்,
ஆயிரம் பேர் உகந்தானும்- ஆரூர் அமர்ந்த அம்மானே.

9

வீடு அரங்கா நிறுப்பானும், விசும்பினை வேதி தொடர
ஓடு அரங்கு ஆக வைத்தானும், ஓங்கி ஒர் ஊழி உள்ளானும்,
காடு அரங்கா மகிழ்ந்தானும், காரிகையார்கள் மனத்து
ஆடு அரங்கத்து இடையானும்- ஆரூர் அமர்ந்த அம்மானே.

10

பை அம் சுடர்விடு நாகப்பள்ளி கொள்வான் உள்ளத்தானும்,
கை அஞ்சு -நான்கு உடையானைக் கால்விரலால் அடர்த்தானும்
பொய் அஞ்சி வாய்மைகள் பேசிப் புகழ்புரிந்தார்க்கு அருள்செய்யும்
ஐ-அஞ்சின் அப் புறத்தானும்-ஆரூர் அமர்ந்த அம்மானே.

திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருவாரூர்
வ.எண் பாடல்
1

எத் தீப் புகினும் எமக்கு ஒரு தீது இலை;
தெத்தே என முரன்று எம் உள் உழிதர்வர்;
முத்தீ அனையது ஒர் மூ இலை வேல் பிடித்து
அத் தீ நிறத்தார்-அரநெறியாரே.

2

வீரமும் பூண்பர்; விசயனொடு ஆயது ஒர்
தாரமும் பூண்பர்; தமக்கு அன்புபட்டவர்
பாரமும் பூண்பர்; நன் பைங் கண் மிளிர் அரவு-
ஆரமும் பூண்பர்-அரநெறியாரே.

3

தஞ்ச வண்ணத்தர்; சடையினர்; தாமும் ஒர்
வஞ்ச வண்ணத்தர்; வண்டு ஆர் குழலாளொடும்
துஞ்ச வண்ணத்தர்; துஞ்சாத கண்ணார் தொழும்
அஞ்ச வண்ணத்தர்-அரநெறியாரே.

4

விழித்தனர், காமனை வீழ்தர; விண் நின்று
இழித்தனர், கங்கையை; ஏத்தினர் பாவம்
கழித்தனர்; கல் சூழ் கடி அரண் மூன்றும்
அழித்தனர்-ஆரூர் அரநெறியாரே.

5

துற்றவர், வெண் தலையில்; சுருள் கோவணம்
தற்றவர்; தம் வினை ஆன எலாம் அற
அற்றவர்; ஆரூர் அரநெறி கைதொழ
உற்றவர் தாம் ஒளி பெற்றனர் தாமே.

6

கூடு அரவத்தர்; குரல் கிண்கிணி அடி
நீடு அரவத்தர்; முன் மாலை இடை இருள்
பாடு அரவத்தர்; பணம் அஞ்சுபை விரித்து
ஆடு அரவத்தர் -அரநெறியாரே.

7

கூட வல்லார், குறிப்பில்(ல்), உமையாளொடும்;
பாட வல்லார்; பயின்று அந்தியும் சந்தியும்
ஆட வல்லார்; திரு ஆரூர் அரநெறி
நாட வல்லார்; வினை வீட வல்லாரே.

8

பாலை நகு பனி வெண்மதி, பைங் கொன்றை,
மாலையும் கண்ணியும் ஆவன; சேவடி
காலையும் மாலையும் கை தொழுவார் மனம்
ஆலயம்-ஆரூர் அரநெறியார்க்கே.

9

முடி வண்ணம் வான மின் வண்ணம்; தம் மார்பின்
பொடி வண்ணம் தம் புகழ் ஊர்தியின் வண்ணம்;
படி வண்ணம் பாற்கடல் வண்ணம்; செஞ்ஞாயிறு
அடி வண்ணம்-ஆரூர் அரநெறியார்க்கே.

10

பொன் நவில் புன் சடையான் அடியின் நிழல்
இன் அருள் சூடி எள் காதும் இராப்பகல்,
மன்னவர் கின்னரர் வானவர் தாம், தொழும்
அன்னவர்-ஆரூர் அரநெறியாரே.

11

பொருள் மன்னனைப் பற்றிப் புட்பகம் கொண்ட
மருள் மன்னனை எற்றி, வாள் உடன் ஈந்து,
கருள் மன்னு கண்டம் கறுக்க நஞ்சு உண்ட
அருள் மன்னர்-ஆரூர் அரநெறியாரே.