பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
வக்கரன் உயிரை வவ்வக் கண் மலர் கொண்டு போற்றச் சக்கரம் கொடுப்பர் போலும்; தானவர் தலைவர் போலும்; துக்க மா மூடர் தம்மைத் துயரிலே வீழ்ப்பர் போலும்; அக்கு அரை ஆர்ப்பர் போலும் ஆவடுதுறையனாரே.