திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

சுற்றுவார்; தொழுவார்; சுடர்வண்ணன், மேல்-
தெற்றினார் திரியும் புரம்மூன்று எய்தான்,
பற்றினார் வினை தீர்க்கும் பழனனை,
எற்றினான் மறக்கேன், எம்பிரானையே?

பொருள்

குரலிசை
காணொளி