திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

தொடரும் தொண்டரைத் துக்கம் தொடர்ந்து வந்து
அடரும்போது, அரனாய் அருள்செய்பவர்;
கடலின் நஞ்சு அணி கண்டர்-கடிபுனல்
படரும் செஞ்சடைப் பாலைத்துறையரே.

பொருள்

குரலிசை
காணொளி