திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

மைக் கடுத்த நிறத்து அரக்கன் வரை
புக்கு எடுத்தலும், பூவனூரன்(ன்) அடி
மிக்கு அடுத்த விரல் சிறிது ஊன்றலும்,
பக்கு, அடுத்த பின் பாடி உய்ந்தான் அன்றே!

பொருள்

குரலிசை
காணொளி