பாரார் பரவும் பழனத்தானை, பருப்பதத்தானை,
பைஞ்ஞீலியானை,
சீரார் செழும் பவளக்குன்று ஒப்பானை, திகழும்
திருமுடிமேல்-திங்கள் சூடிப்
பேர் ஆயிரம் உடைய பெம்மான் தன்னை, பிறர்
தன்னைக் காட்சிக்கு அரியான் தன்னை,-
கார் ஆர் கடல் புடை சூழ் அம் தண்
நாகைக்-காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே.