பொன் மணி அம் பூங்கொன்றை மாலையானை,
புண்ணியனை, வெண் நீறு பூசினானை,
சில்மணிய மூ இலைய சூலத்தானை, தென்
சிராப்பள்ளிச் சிவலோக(ன்)னை,
மன் மணியை, வான் சுடலை ஊராப் பேணி வல்
எருது ஒன்று ஏறும் மறை வல்லானை,-
கல் மணிகள் வெண் திரை சூழ் அம் தண்
நாகைக் காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே.