நெடியானும் மலரவனும் நேடி ஆங்கே நேர்
உருவம் காணாமே சென்று நின்ற
படியானை, பாம்புரமே காதலானை, பாம்பு
அரையோடு ஆர்த்த படிறன் தன்னை,
செடி நாறும் வெண் தலையில் பிச்சைக்கு என்று
சென்றானை, நின்றியூர் மேயான் தன்னை,-
கடி நாறு பூஞ்சோலை அம் தண்
நாகைக்-காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே.