பொன்னே போல்-திருமேனி உடையான்தன்னை,
பொங்கு வெண்நூலானை, புனிதன்தன்னை,
மின்னானை, மின் இடையாள் பாகன்தன்னை,
வேழத்தின் உரி விரும்பிப் போர்த்தான்தன்னை,
தன்னானை, தன் ஒப்பார் இல்லாதானை,
தத்துவனை, உத்தமனை, தழல் போல் மேனி
அன்னானை, ஆரூரில் அம்மான்தன்னை-
அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!.