சூளாமணி சேர் முடியான்தன்னை,
சுண்ணவெண்நீறு அணிந்த சோதியானை,
கோள் வாய் அரவம் அசைத்தான்தன்னை,
கொல் புலித் தோல் ஆடைக் குழகன் தன்னை,
நாள் வாயும் பத்தர் மனத்து உளானை,
நம்பனை, நக்கனை, முக்கணானை,
ஆள்வானை, ஆரூரில் அம்மான்தன்னை,-
அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!.