பை ஆடு அரவம் கை ஏந்தினானை, பரிதி
போல்-திருமேனிப் பால்நீற்றானை,
நெய் ஆடு திருமேனி நிமலன்தன்னை,
நெற்றிமேல் மற்றொரு கண் நிறைவித்தானை,
செய்யானை, செழும் பவளத்திரள் ஒப்பானை,
செஞ்சடைமேல் வெண்திங்கள் சேர்த்தினானை,
ஐயாறு மேயானை, ஆரூரானை,-அறியாது
அடிநாயேன் அயர்த்த ஆறே!.